12

78

Home » , , » நெல் :: சேற்றுவயல் நேரடி விதைப்பு

நெல் :: சேற்றுவயல் நேரடி விதைப்பு

  • கோடையுழவு அவசியம்
  • விதைப்பதற்கு முன்பாக நீர் கட்டி சேற்றுழவு செய்யப்படுதல் வேண்டும்
  • மிகமிக அவசியம் நிலம் நாற்றங்காலைப் போன்றே சமன் செய்யப்படுதல் வேண்டும்
  • இங்கும் அங்கும் மேடு பள்ளமாகவோ, குண்டும் குழியுமாகவோ இருப்பின் அங்கெல்லாம் நீர் தேங்கி நாற்றுக்கள் சரி வர முளைக்காமல் இடைவெளி அதிகம் காணப்படும்.
  • நிலம் சமன்படுத்துதல் நீர் மேலாண்மைக்கும், களை மேலாண்மைக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நன்கு உணர்ந்து. தக்கவாறு நிலம் சமன் படுத்தப்பட வேண்டும்.
  • அரை அடி அகலத்தில் சிறிய வடிகால் வாய்க்கால்கள் நிலத்தின் குறுக்கேயும், 3 மீ இடைவெளியிலும், வரப்பின் ஒரத்திலும் அமைத்தல் நல்லது.



விதைப்பு
  • எக்டருக்கு 60 கிலோ
  • முளை கட்டிய விதைகள்
  • விதை நேர்த்தி முன்னர் குறிப்பிடப்பட்டவை போன்றே செய்யவும்
  • மண் மறைய சிறிய அளவில் நீர் வைத்து நேரடியாகக் கையாலும், சேறும் சகதியுமான சூழ்நிலையில் உருளை விதைப்பான் மூலமும் விதைக்கலாம்
  • ‘இருபயிர்’ முறை என நெல்லும்-பசுந்தாள் உரமும் ஒருங்கே விதைத்து உர நிர்வாகத்தில் சிக்கனமும், மகசூலில் மேன்மையும் பெறலாம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள ‘நெல் - பசுந்தாள்’ விதைப்பானைப் பயன்படுத்தலாம்

பின்செய் நேர்த்தி
  • பயிர் களையப்படுவதும், பாடு நிரப்பப்படுவதும் விதைத்த 14-21 ஆம் நாட்களில் செய்யப்படவேண்டும். இது மிகவும் முக்கியமான பயிர் செய் நேர்த்தியாகும்.

  • நெல்லும் பசுந்தாள் பயிரும் ஒருங்கே பயிரிடப்பட்டிருந்தால், பசுந்தாள் செடியினை 40 செ.மீ (சுமார் 11/4 அடி) வளர்ச்சியில் அல்லது விதைத்த 30 நாட்களில், இதில் எந்த நிலை முந்துகின்றதோ அப்பொழுதே ‘உருளைக் களை எடுப்பான்’ கருவியைக் கொண்டு மடக்கி அழுத்தி மிதித்து விடல் வேண்டும்.

  • சந்தர்ப்பம் கிடைக்குமானால் மீண்டுமொருமுறை 7-10 நாட்களுக்குள் ‘உருளைக் களை எடுப்பானை’ நெல் வரிசைகளுக்கு இடையே இழுப்பதால் வேரிற்கு புது பிராணவாயு கிடைக்கவும், தேவையற்ற அங்கக அமிலங்கள் வெளியேறவும் வாய்ப்புகள் அதிகம். பயிரின் வேர் புத்துயிர் பெற்று பயிர் மேலோங்கி, நல்ல மகசூல் தரவல்ல ஒரு பயிர் செய் நேர்த்தி என்பதை உயர்த்தல் வேண்டும்
உரமிடுதல்
  • நடவு முறைக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகள் இம்முறைக்கும் ஏற்றது

  • தழைச்சத்து, சாம்பல் சத்து இரண்டையும் 25 சதங்களாகப் பிரித்து விதைத்த 21 நாட்கள் விரைந்து தூர் பிடிக்கும் பருவம், பூங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடுதல் வேண்டும்

  • பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து முழுவதுமே அடியுரமாக கடைசி உழவின் போது அளிக்க வேண்டும்

  • உயிர் உரங்கள் நடவுமுறை பயிரிருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

  • நுண்ணூட்டச்சத்துக்கள், இழைவழி உரமிடுதல் போன்றவைகளும் இப்பயிருக்கும் பின்பற்றப்பட வேண்டும். நடவு முறையில் கூறப்பட்டதே இதற்கும் பொருந்தும்

களை மேலாண்மை
  • சேற்று வயல் நேரடி விதைப்பில், களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லிகளான பிரிடில்லாக்குளோர் 0.75 கிலோ / எக்டருக்கு விதைத்த 8-ம் நாளில் அல்லது பிரிட்டிலாக்குளோர் + சேப்னரை (சோபிட்) 0.45 / எக்டருக்கு என்ற அளவில் தெளிப்பதை தொடர்ந்து விதைத்த 40வது நாளில் ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • சேற்று வயல் நேரடி விதைப்பில், உருளை விதைப்பான் மூலம் விதைத்து, கோனோ களைக் கருவி கொண்டு விதைத்த 10, 20 மற்றும் 30வது நாளில் களையெடுக்க வேண்டும்.
  • நடவு முறையில், நட்ட 15-20 நாள் மற்றும் 45வது நாளிலும் இருமுறை கைக்களை எடுக்க வேண்டும் அல்லது 3.0லி / எக்டர் என்ற அளவில் பென்டிமெத்தாலின் களைக் கொல்லியை நட்ட 8வது நாளில் உகந்த ஈரப்பதத்தில் தெளிப்பதை தொடர்ந்து நட்ட 45வது நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • இரட்டை பயிர் முறையில் சேற்று வயல் நேரடி விதைப்பு நெல் மற்றும் தக்கைப் பூண்டை பயிரிடும் போது அதன் உற்பத்தி திறன் மற்றும் பொருளாதார வருவாயை மேம்படுத்த களை முளைப்பதற்கு முந்தைய களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிப்பதை தொடர்ந்து கோனோ களைக் கருவி கொண்டு வரிசைகளுக்கு இடையிலும், வரிசைகளுக்கு உள்ளே கைக்களை மூலமும் விதைத்த 35வது நாளில் களை எடுக்க வேண்டும்.
  • களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் விதைத்த 3 ஆம் நாளில் தெளிக்கவும் + ரோட்டோ உருளை வடிவ களைக் கருவி மூலம் விதைத்த 45வது நாளில் களை எடுக்க வேண்டும். இதன் மூலம் எகினோக்ளோவா கிரஸ்கல்லி, பேனிகம் ரெபன்ஸ், எக்லிட்டா ஆல்பா மற்றும் மோனோகோரியா வஜினேலிஸ் போன்ற களைகளை கட்டுப்படுத்துவதுடன் அதிக தானிய மகசூல், நிகர லாபம் மற்றும் வரவு செலவு விகிதத்தை பெறலாம்.
  • பாசன மற்றும் மானாவாரி நேரடி நெல் விதைப்பில் களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பிரிட்டில்லாகுளோர் 0.45 கிலோ / எக்டரை விதைத்த மூன்றாம் நாளிலும் அசிம்சல்பூரான் 35 கிராம் / எக்டரை விதைத்த 20வது நாளிலும் அதனை தொடர்ந்து விதைத்த 45 நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
  • தக்கைப் பூண்டை ஊடுபயிராக பயிரிடும் போது பிரிட்டில்லாகுளோர் + சேப்னரை 0.45 கிலோ / எக்டர் என்ற அளவில் விதைத்த 4வது நாளில் தெளிப்பதை தொடர்ந்து விதைத்த 35வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும். இதுன் மூலம் அதிக உற்பத்தி திறனை பெறலாம்.
  • நெல் – நெல் – தரிசு பயிர் முறையில் செஸ்போனியா ரோஸ்ட்ரோடாவை பயிரிட்டு வயலில் அமுத்தி விடுவதால் களைகளைக் கட்டுப்படுத்தலாம். இதனை தொடர்ந்து நட்ட 35வது நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
  • விதைத்த முதல் வாரத்தில் மண் நனைய நீர் பாய்ச்சுதல் போதுமானது. களைக்கொல்லி இடப்பட்டிருப்பின் அதற்கு ஏற்றவாறு நீர் கட்ட வேண்டும்.
  • நீரின் ஆழம் பயிரின் வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக ஒ ரு அங்குலம் வரை அதிகரிக்கப்படலாம்.
  • அதன்பின்னர் நடவு முறையில் கூறப்பட்ட வழிமுறையைப் பின்பற்றவும்.
Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups