12

78

Home » » பொடுகும் ஆயுர்வேதமும்..!

பொடுகும் ஆயுர்வேதமும்..!

முடி உதிரும் பிரச்சினைக்கு முதல் படியாக இருப்பவை இந்த பொடுகுதான். பொடுகுகளை ஒழிக்க பல வழிகள் இருந்தாலும், இயற்கை வழிகள் மிக சிறந்தவையாக செயல்படுகிறது. தலையில் உள்ள பொடுகுகள் அனைத்தையும் இது போக்க வல்லது. ஆயுர்வேத மூலிகை லோஷன்கள் பொடுகை விரட்டி அடிக்க பெரிதும் உதவுகிறது.


துளசி லோஷன்

மூலிகைகளில் மிக சிறந்தது இந்த துளசி. உடலில் ஏற்பட கூடிய நோய்கள் பலவற்றில் இருந்து இது காக்க வல்லது. உங்களின் பொடுகு தொல்லையை ஒழிக்க இந்த துளசி லோஷன் நன்கு உதவும். தேவையானவை :- 

துளசி 20 நீர் 4 கப்


செய்முறை :-
 முதலில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் துளசி இலைகளை போட வேண்டும். 20 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இந்த நீரை தூங்க போகும் முன் தலையில் தடவி கொண்டு தூங்கவும். மறுநாள் தலையை அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.





சிறந்த லோஷன் 

இந்த லோஷனை தயாரித்து தலைக்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த லோஷன் பல வித மாற்றங்களை நமது தலையில் ஏற்படுத்தும். குறிப்பாக பொடுகில் இருந்து விடுதலை தரும். தேவையானவை :- 
யோகர்ட் 2 ஸ்பூன் 
ரோஸ்மேரி எண்ணெய் 1 ஸ்பூன் 
எலுமிச்சை எண்ணெய் 1 ஸ்பூன்






செய்முறை :-
 முதலில் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் யோகர்டை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை எண்ணெயையும் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலையில் தடவவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் சிகைக்காய் பயன்படுத்தி குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் பொடுகுகள் முற்றிலுமாக குணமாகி விடும்.











Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups