12

78

Home » , » நன்னீர் மீன் வளர்ப்பு

நன்னீர் மீன் வளர்ப்பு

01 நன்னீர் மீன்  வளத்தில் உர மோலாண்மை.
02 குளத்திற்கு உரமிடுதல் 
03 குளத்து மண்ணின் தன்மைகள்
04 கரிம உள்பொருள்
05 கரிம நைதர்ஜன் விகிதம்
06பொதுவான ஊட்டசத்துகளின் நிலைகள்

 Image result for மீன் வளர்ப்பு

நன்னீர் மீன் வளத்தில் உர மேலாண்மை

 உற்பத்தியை அதிகரிக்க வேவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள   வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து, தேவையான அளவு   உரமிடுதலாகும். குளத்தின் பராமரிப்புகள், மண் மற்றும் நீரின் தரத்தை பொருத்ததே.

குளத்திற்கு உரமிடுதல்

மீன் குளத்தில் உணவு சுழர்ச்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகிறது. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே இருப்புச்செய்யும் மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகிறது (தழைச் சத்து, மனிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மற்றும் மாங்கனீசு சத்துக்கள்) மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கிறது.

குளத்து மண்ணின் தன்மைகள்

மண்ணின் கார அமிலத்தன்மை
குளத்தில் மீன் உற்பத்திக்கு கார அமிலத்தன்மை முக்கியமான ஒன்று. இது குளத்தில் உள்ள இரசாயன வினைகளை கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள மண் காரஅமிலத்தன்மை (7 மற்றும் அதற்கு மேல்) உள்ளவை மீன் உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால் அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ளச் சத்துக்களை குறைத்துவிடும்.

கரிம உள்பொருள்

பாக்டீரியாவின் ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல் முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து சத்துக்கள் வெளியாகிறது. இயற்கை கரிமம் குளத்து மண்ணில் 0.5%க்கு குறைவாக இருக்கக் கூடாது. 0.5-1.5% மற்றும் 1.5 - 2.5%. நடுநிலை மற்றும் அதிக அளவு இருக்கலாம். இதே போன்று 2.5%க்கு மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய முடியாது.

கரிமம்: நைட்ரஜன் விகிதம்

மண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம்:நைட்ரஜன் விகிதம் தேவைப்படுகிறது. கரிமம்:நைட்ரஜன் விகிதம் உடையும் அளவு அதி வேகமாக, நடுநிலை, குறைவாக முறையே >10,10-20, 20 என்றவாறு இருக்க வேண்டும். பொதுவாக கரிமம்:நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15க்குள் இருந்தால் மீன் வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.

பொதுவான ஊட்டச்சத்துக்களின் நிலைகள்

முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தழை, மனி, மற்றும் சாம்பல் சத்துக்களாகும். மீன் குளங்களில் பாஸ்பேட் உரத்திற்கு சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். குளத்து மண்ணில் உள்ள பாஸ்பேட் அளவைப் பொருத்து 156 - 312 கி சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அளிக்க வேண்டும். மீன் வளர்ச்சி மற்றும் இருப்பு குளங்களில் செய்யும் போது 250 - 468 கி சூப்பர் பாஸ்பேட் இருக்க வேண்டும். இன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பாஸ்பேட் உரம் அளிக்க வேண்டும்.மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் 16 - 32 கி/ஹெ. அல்லது பொட்டாசியம் சல்பேட் 20 - 40 கி/ஹெ. வளர்ச்சி மற்றும் இருப்புச் செய்யும் போது அளிக்க வேண்டும். இதை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையில் சரிபாதியாக பிரித்து அளிக்க வேண்டும்.
குளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும். இதன் மூலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம், குறைந்த உரங்களே தேவைப்படும். இயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும் போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.

மீன் பிடிப்பு

மீன்பிடிப்பு வலைகள்

நிறைய மீன்களை பிடிக்க மற்றும் நிறைய மீன்கள் தேவைப்படும் போது தீவிர அல்லது நேரடி மீன்பிடிப்பு முறை ஏற்றதாகும். ‘தீவிர’ என்றால் மனிதன், விலங்கு மற்றும் இயந்திர வலு மூலம் மீன் வலைகளை நேரடியாக தண்ணீரில் வீசி மீன் பிடிப்பது என்றாகும். பல வேலைகளில் ‘மிதமான’ மீன் பிடிப்பு வலைகளை விட (செவுள் வலை மற்றும் பொறி) தீவிர மீன்பிடிப்பு வலைகளின் ஆற்றல் திறன் அதிகமானது.
 கோல் இழு வலை
இது ஒருவகையான இழு வலை, வலையின் வாயிலை ஒரு கோலின் ஒவ்வொரு முனையிலும் சேர்த்துவிட வேண்டும். அதை கடலின் மேல் போகும் படி செய்ய வேண்டும். இழு வலை பொருந்தியதும் அதனுடன் அடிமட்டச் சங்கிலி மற்றும் கனச்சங்கிலியையும் ஆழத்திற்கு ஏற்றமாதிரி பொருத்தினால் இன்னும் அதிக மீன்கள் கிடைக்கும். இந்த வலை இழுவையினால் மீன்களை கீழிருந்து மேலே இழுத்து வலையிள் பிடிபடுகிறது. நவீன கோல் இழு வலையின் அளவு 4-12செ.மீ மற்றும் கோல் நீளம் இவை அனைத்தும் உபயோகிக்கும் இயந்திரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
 அடிமட்ட பலகை இழு வலை
அடிமட்ட பலகை (அல்லது) கீழ் இழுவலை மிகவும் பெரியது. இது கடல்மேல் இழுத்து செல்லும் வலை. வலையின் முன் பக்கம் இறகை போன்ற ஆட்டர் பலகையில் பொருந்தியுள்ளது. மீன்கள் கூட்டமாக பலகையின் நடுவில் வரும் அதன்பின் வலைக்குள் மாட்டிக்கொள்ளும். கடைசியாக பொனல் மூலம் அனைத்து மீன்களையும் எடுத்துக்கொள்ளலாம்
மிதவை இழுவலை
கடல் மேலிருந்து கடல் அடிமட்டம் வரை உள்ள ஆழத்தில் வரிப்பது மிதவை இழுவலை ஆகும். நீந்தும் மீன், மீன்திரளிளுள்ள மீன் மற்றும் கடற்பரப்பு மீன்களை பிடிக்க உதவுது மிதவை இழுவலை. அதாவது கொடுவா, கானாங்கத்தி, கெரிங் ஆகிய மீன்களை பிடிக்க மிதவை இழுவலை பயன்படுகிறது. வலையின் அளவுக்கு ஏற்றது போல் மீன்களை பிடிக்கலாம் பிடித்த மீன்களை பம்பு உதவியுடன் படகுக்கு இழுத்துக்கலாம். நடுகடலில் செல்லும்போது இழு பலகைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். வலையின் நீலம் 1/2 மையில் தூரம், அகலம் 1/4 மையில் என இருந்தால் நீரைய மீன்கள் கிடைக்கும்.
சூழ் வலை
சூழ்வலை ஒருவகையான கடல் அடிமட்ட மீன் பிடிப்பு வலையாகும். இதல் காட் மீன், ஆழ்கடல் மீன் மற்றும் தட்டை மீன் இனங்கள் போன்ற வகையான மீன்களை பிடிக்கலாம். இந்த வலையில் கயிறு சுற்றியும் இருக்க நடுவில் வலையிருக்கும். ஒரு வலைப்பிடிப்பில் மீன்கள் அனைத்தும் பிடிப்படும். இது ஒரு எளிமையான மீன்பிடிபபு வலையாகும், மற்ற வலைகளை விட இந்த வலை மீன்பிடிப்பிக்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும் மற்றும் தரமுள்ள மீன்கள் உற்பத்தியாகும்.
சுருக்குவலை
சுற்றியுள்ள மீன் கூட்டங்களை பெரிய மீன் வலையினால் பிடித்து வலையை சுருக்கிக் கொள்ளும் இந்த சுருக்குவலை. இந்த வலையின் மூலம் நிறைய மீன்கள் பிடிப்படும் சூரை மீன்கள், கானாங்கத்தி என பெரிய வகையான மீன்கள் பிடிப்படும்.
ஓடு கயிறு வலை
கயிறு நுனியில் கொக்கி வைத்து மீன் களை கவருதல் ஓடு கயிறு வலையாகும். இந்த முறை மீன் பிடிப்பை பயன்படுத்தி அதிக தரமுள்ள மிதவை மீன்களை பிடிக்கலாம். (எ.கா) கெண்டை, உழி மற்றும் சால்மோன் மீன்கள்.
குத்தீட்டி
இந்த முறையான மீன்பிடிப்பு உயர்ந்த வகையான மீன்களை பிடிக்க உதவும். அதாவது சுவார்ட் மீன் மற்றும் சூரை மீன்கள். குத்தீட்டி குறிப்பிட்ட மீன் வளர்ப்பில் மட்டும் பயன்படுத்தலாம். முன்னதாகவே மீன்னின் அளவு, வயது என தெரிந்து அதன் பின் பிடிக்க வேண்டும்.

மிதமான மீன் பிடிப்பு வலைகள்

செவுள் (அ) பொருத்தப்பட்ட வலைகள்
செவுள் வலை என்பது வலையை கடல் அடிமட்டம் வரை அல்லது கடல் மத்தியில் விரித்துவிடுவார்கள். அதில் மீன்கள் மாட்டிக் கொள்ளும். இது ஒரு பலமையான மீன்பிடிப்பு முறையாகும். வலைகளில் மாட்டிய மீன்கள் வெளியே செல்ல முயற்சிக்கும். பெரிய வகை மீன்கள் செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும். மீன் இனம் மற்றும் மீன் அளவுக்கு ஏற்றது போல் வலை விரிக்க வேண்டும். 
மா பாச்சு வலை
இவ்வகை வலையில் மூன்று அடுக்குகள் உள்ளன. வெளி மற்றும் உற்பகுதியை சாதாரண கண்ணி மூலம் ஆனது. ஆனால் நடுபகுதியை உயர்ந்த கண்ணியால் பொருத்தப்பட்டுள்ளது. வலையை செங்குத்தாக மிதக்கும் படி தொங்கவிடும் போது மீன்கள் மாட்டிக்கொள்ளும்.
சிக்கவைக்கும் வலை
இந்த வலை செவுள் வலையை போன்றது. ஆனால் பிரிந்திருக்கும். சிறிய அளவு மற்றும் குறைவாக மிதக்கும். இதில் செவுள் வலையை விட நிறைய மீன்களை பிடிக்கலாம்.
ஆயிரங்கால தூண்டில்
இது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களை பிடிக்கலாம், பெரிய வகை தூண்டில் (50-100 கி.மி). இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டு பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இன கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக்கொள்ளும்.
கழிதூண்டில் மீன்பிடிப்பு
கழிதூண்டில் மூலம் ஒரே இன மேற்பரப்பில் உள்ள மீன்களை பிடிக்கலாம். சூரை மீன்களை பிடிக்க இந்த தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்த தூண்டிலில் இறையை பயன்படுத்தி படகுக்கு பக்கததில் உள்ள மீன்களை கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை மூலமாக மீன்களை பிடிக்கலாம்.
போலி இரை மீன்பிடிப்பு
கணவாய் மீன்களை பிடிக்க போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதை தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களை பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும் போது மாட்டிக்கொள்ளும். ஒளி ஈர்ப்பு மூலம் எப்பொழுதும் இரவில் போலி இரை மீன்பிடிப்பை பயன்படுத்துவார்கள்.

பொறி

மீன்பிடி பொறி
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசிவிடுவார்கள். மாட்டிய மீன்களை வலையிலிருந்து தப்பி செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேலையில் பெரிய வலைகளை பயன்படுத்தி மீன்களை பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்த பொறி மூலம் பிடிக்கலாம்.
வலைக்கு ஏற்றவாரு பொறியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத (அ) குறைந்த இடைகொண்ட மீன்களை திரும்ப கடலிலேயே விட்டுவிடுவரர்கள். இந்த பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகள் மாட்டிக்கொள்ளும்.

மீன்களை கவரும் சாதனங்கள்

மீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களை சார்ந்து வாழ்கின்றது. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளது. அப்பொழுது சில சாதனங்களை பயன்படுத்தி மேலே உள்ள மீன்களை பிடிக்கலாம். மீனவர்கள் இந்த சாதனங்ளை படகுடன் இணைத்து மீன்களை கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடி பொறி, தூண்டில், இன்னும் பல.

மீன்பிடிப்பு கலன்கள்

பெரிய அளவில் மீன்பிடிக்க மிகவும் முக்கியமானவை மீன்பிடிப்பு கலன்கள். கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெரிய வகையான மீன் பிடிப்பு படகுகள் வடிவமைத்துள்ளனர். இந்தியாவில் இரண்டு வகையான மீன் பிடிப்பு கலன்கள் உள்ளன. இயந்திரம் மற்றும் இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.

இயந்திரமற்ற படகுகள்

கட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரமற்ற படகுகள் ஆகும்.
கட்டுமரம்
இது ஒரு எளிமையான மீன்பிடிப்பு கலனாகும். சில வளைவு மரத்துண்டுகளை இணைத்து கட்டுமரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதை கிழக்கு கடற்கரை பகுதிகளில் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் நான்கு வகையான கட்டுமரம் உள்ளது. ஒரிசா வகை, ஆந்திரா வகை, கோரமண்டல் வகை மற்றும் கன்னியாகுமரி வகை கட்டுமரம்.
கடல்தோண்டி தோணி
இதும் ஒரு எளிமையான மீன்பிடிப்பு தோணி வகை. இதை வைத்து கடற்கரை அருகில் இருக்கின்ற மீன்களை பிடிக்க உதவும். சிறு அளவுடைய தோணி மரபலகையினால் செய்யப்பட்டது.
இந்தியாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஓடம், தோணி, வன்சியஸ் ஆகியவற்றை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர்.
மரப்பலகை தோணி
இது பெரிய வகையான தோண்டி தோணி, மரப்பலகையினால் ஆனது. கேரளாவில் பயன்படத்துகின்றனர்.

Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups